பொத்துவிலில் இருந்து திருகோணமலைக்கு சொகுசு பஸ்ஸினை போக்குவரத்துக்கு விடுமாறு மக்கள் கோரிக்கை

சியாம் அபுதாஹீர்-

கி
ழக்கு மாகாணத்தின் பொத்துவில் ஊரில் இருந்து கிழக்கின் தலைநகராக இருக்கும் திருகோணமலைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்களை போக்குவரத்துக்கு விடுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது...

பொத்துவில், திருகோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை, மருதமுனை, நீலாவனை, இன்னும் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் தூர இடங்களுக்கு வேலைகளுக்குச் செல்லவேண்டிய நிலையில் போக்குவரத்தில் பெரும் நெரிசலை எதிர் நோக்குகின்றனர்.

இதனால் பயணத்தை சிறப்பாகத் தொடர சொகுசு பஸ்ஸின் தேவை இப்பொழுது உணரப்பட்டுள்ளமையினால் உடனடியாக போக்குவரத்துக்கு விடுமாறு அக்கோரிக்கையினை அனுப்பியுள்ளனர்.
இக்காலத்தின் காலனிலை மிகவும் மோசமாகவும் சூடானதாகவும் இருப்பதனால் போக்குவரத்து பஸ்களில் நெரிசலும் கஸ்டமும் இருப்பதால் இக்கோரிக்கையினை விட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கைக் கடிதம் கிழக்கு மாகாண போக்குவரத்து மாகாணப் பணிப்பாளர், போக்குவரத்து மாகாணத்தின் தலைவர் அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எனவே அவசரமாக பொத்துவில் தொடக்கம் திருகோணமலைக்குச் செல்ல சொகுசு பஸ்களை மக்கள் பயணத்துக்காக நியமிக்குமாறு அதிகளவான மக்கள் இணைந்து குறிப்பிட்ட இக்கோரிக்கையினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -