250000 திர்ஹம்களை திருடிய குற்றச்சாட்டில் இலங்கைப் பெண்ணொருவர் அபுதாபி பொலிசாரினால் கைது.!


அபுதாபி வீடொன்றில்  சுமார் 250000 திர்ஹம்களை  திருடிய குற்றச்சாட்டில் இலங்கைப் பெண்ணொருவர் அபுதாபி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுத்திகரிப்பு தொழிலாளியாக கடந்த பல வருடங்களாக  குறித்த  வீட்டில் கடமையாற்றி வந்த இலங்கைப் பெண்ணே இந்த திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் வீட்டு எஜமானி பொலிசில் செய்த முறைப்பாட்டை  அடுத்தே குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருட்டுச்சம்பவம் நடைபெற்ற வீட்டில் அன்றைய தினம் வீட்டார் வெளியில் சென்றுள்ளனர். திருடப்பட்ட பணத்தொகையானது எஜமானியின் படுக்கை அறையில் உள்ள அலுமாரியில் பையொன்றில் வைக்கப்பட்டிருந்துள்ளது.

இந் நிலையில் வீடுதிரும்பிய எஜமானி குறித்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை அடுத்து பொலிசில் அவர் செய்த முறைப்பாட்டை அடுத்து குறித்த வீட்டின் பணிப்பெண்ணாக வேலை பார்த்துவந்த இலங்கைப் பெண் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தூதரக தகவல்கள் தெரிவித்தான.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :