பிரதம நீதியரசர் சிறந்த முறையில் நடித்துக் கொண்டிருக்கிறார் - அமைச்சர் ஜோன்ஸ்டன்

பிரதம நீதியரசர் பிரச்சினையும் பிளாஸ்டிக் கூடை பிரச்சினையும் ஒன்று என நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் சிறந்த முறையில் நடித்துக் கொண்டிருப்பதாக கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கௌரவமான முறையில் பிரதம நீதியரசர் பதவி விலகாவிட்டால் அவரை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கான அதிகாரம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் கூடை சட்டம் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த சட்டத்தை மீறுவோர் தண்டிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :