ரயிலின் முன் பாய்ந்து முஸ்லிம் பெண் தற்கொலை

முந்தல் பொலீஸ் பிரிவுக்குற்பட்ட மதுரங்குளி நகரில் கொழும்பு - புத்தளம் பயணிகள் புகையிரதத்திற்கு முன் பாய்ந்து பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.குறித்த ரயில் கொழும்பிலிருந்து புத்தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் முஸ்லிம் பெண்ணொருவர் மதுரங்குளி நகரில் ஒரு ஒதுக்குப்புறமாக நின்று கொண்டிருந்ததாகவும், பின்னர் ரயில் மதுரங்குளி நகரை அண்மித்த போது குறித்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணில் உடல் முற்றாக சிதைவடைந்து காணப்படுவதுடன், இது தொடர்பான விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :