உள்ளூர் அரசியல்வாதியின் மகனால் புத்தளத்தில் 2 முஸ்லிம் மாணவர்கள் கடத்தி தாக்கப்பட்டுள்ளனர்.

AD-புத்தளம் நகரில் இரு பாடசாலை மாணவர்கள் கடத்தி தாக்கப்பட்டு மீண்டும் கடத்தப்பட்ட இடத்திலேயே போட்டுச் செல்லப்பட்ட சம்பவமொன்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தாக்கப்பட்ட இருவரும் முஸ்லிம் மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

புத்தளம் - மூர் சந்தியில் வசிக்கும் இரு சகோதரர்கள் நேற்று (13) இரவு ஜீப் வண்டியில் வந்த இருவரால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

புத்தளம் நகரில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் சா/த முடித்த மாணவர் ஒருவரும் இம்முறை சா/த எழுதவுள்ள மாணவருமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். 

இரவு 8 மணிக்கு குறித்த இருவரும் (அண்ணன், தம்பி) கடத்தப்பட்டு பொல்லு, கை, கால்களால் தாக்கப்பட்டு மீண்டும் இரவு 10 மணிக்கு கடத்தப்பட்ட இடத்திலேயே போடப்பட்டுச் சென்றுள்ளனர். 

இதில் ஒருவருக்கு பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்று (14) காலை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

புத்தளம் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

புத்தளம் பிரதேசத்தில் உள்ள உள்ளூர் அரசியல்வாதியின் பிள்ளைகள் இவர்களை கடத்தி தாக்கியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

காதல் பிரச்சினை இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :