இலங்கை அணி 3 விக்கட்டுகளை இழந்து 361 குவித்து ஸ்திரமான நிலையில் உள்ளது.


இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 3  விக்கட்டுகளை இழந்து 361 குவித்து ஸ்திரமான நிலையில் உள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச அரங்கில் இன்று ஆரம்பமானது. நானயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் குணரதன 41 ஓட்டங்களையும், திலகவர்தன டில்ஷான் 54 ஓட்டங்‌களையும், அதிரடி துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார 142 ஓட்டங்களையும் குவித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். ஆட்டமிழக்க  லகிருதிரிமன்னே 74 ஓட்டங்களுடனும்  அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் 25 ஒட்டங்களுடனும்  ஆட்டமிழக்காது களத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்றைய ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 361 ஒட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் பங்களாதேஷ் பந்து வீச்சாளர் சொஹாக் காஷி 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்களாக 31 ஓவர்கள் பந்து வீசி 101 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :