காத்தான் குடியில் 5 மாதக் குழந்தை கை விடப்பட்ட நிலையில் மீட்பு.


KI: மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று (13.3.2013) மாலை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தை காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்று மாலை 6மணியளவில் புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதியொன்றின் மரத்தடியின் கீழ் குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.


அவ்வழியால் சென்ற வயோதிபர் ஒருவர் இக்குழந்தையைக் கண்டு அவரது இல்லத்திற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் காத்தான்குடி பொலிசாருக்கு இதை தெரியப்படுத்தியதையடுத்து ஸ்த்தளத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசாரிடம் அக் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
பொலிசார் இக் குழந்தையை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்க கொண்டு சென்றதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த கைவிடப்பட்ட குழந்தை ஆண்குழந்தை எனவும் இக்குழந்தைக்கு 5மாதம் இருக்கலாம் என தெரிவித்த காத்தான்குடி பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை நடாத்திவருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :