நிந்தவூரில் வழிகாட்டல் கருத்தரங்கு



(சுலைமான் றாபி) 
நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையில்  தேசிய கல்விக் கல்லூரிகளில் ஆசிரிய பயிற்சியினை மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று புதன் கிழமை (06.03.2013) ம் திகதி நிந்தவூர் அல் அதான் பாடசாலையின் கேட்போர் கூடத்தில்  இடம் பெற்றது. 
இவ்வழிகாட்டல் கருத்தரங்கில் அட்டாளைச்சேனை  தேசிய கல்வியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும், மொழி மற்றும் சமய கற்கை நெறிகளுக்கான தலைவருமான அஷ்ஷேஹ் மௌலவி MI ஜௌபர் மற்றும்   அட்டாளைச்சேனை  தேசிய கல்வியல் கல்லூரியின்   விரிவுரையாளர் Dr. AGA நளீர் மற்றும் இத்துறையில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். 
இந்நிகழ்வில் பல்கழைக்கழக பிரவேசத்திற்கு  தகுதியுடைய  மாணவர்களும், கல்விக்கல்லூரிக்கு  தகுதியுடைய  மாணவர்களும் எதிர்காலத்தில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி இந்நிகழ்வில் கலந்து கொண்ட விரிவுரையாளர்களால்  நன்கு தெளிவுபடுத்தப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :