ஒரு கலங்கிய களங்கம் ..!!!


பொல்லாத உலகமடா
புரிந்து கொள்ளல் கடினமடா
மெய்யாக உரைப்பதுவோ
மென்று கொண்டு விழிப்பதுவோ
பெண்ணாகப் பிறந்ததனால்
பெரும் இடரும் பிறந்திடுமோ

கண்ணான மணியொன்றை
கர்ப்பித்து ஈன்றெடுத்து
வீதிலே விட்டெறிந்தாள்
வினையாகச் செய்துவிட்டாள்
பெண்மையின் மானத்தைப்
பெருங்கடலில் கரைத்துவிட்டாள்

பெண்மைக்கு இழுக்கு அவள்
மென்மைக்கு வழக்கு அவள்
தவறாகச் செய்ததுவோ
தவறு என்று ஆனதுவே
காலம் கடந்தகரு - ஒன்று
உருவாகிப்போனதிங்கே

பெண் குழந்தை பிறந்துவிடல்
பெருந்தவறு என்பதுவா
இறைவன் செய்து விட்ட
குறையினிலே பெண்ணினமா
மறைகள் தானெங்கே
மார்க்காம் ஏனிங்கே

மூர்க்கம் கொண்ட பெண்ணினமும்
மார்க்கம் ஏனோ பேசுதிங்கே
பெண்ணுக்குப் பெண்ணெதிரி
பெண்மைக்கு மண்ணெதிரி
வன்மைக்கும் பெண்மைதானே
வாழுவதும் பெண்மைதானே

மடமைகொண்ட பெண்ணினது
மாரறுத்து எறிந்திடலாம்
பெண்மையின் களங்கமதை
உலகறியத் தலை கொய்திடலாம்
வேரறுத்த ............ மகள்
நாறடித்த ............ மகள்

முப்தா முஹம்மட்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :