ஹலால் சான்றிதழை இனிமேல் வினியோகிப்பதில்லை என உலமா சபை எடுத்த தீர்மானம் தொடர்பில் விரிவான விளக்கம் அவசியம்-சம்பிக்க


ஹலால் சான்றிதழை இனிமேல் வினியோகிப்பதில்லை என உலமா சபை எடுத்த தீர்மானம் தொடர்பில் விரிவான விளக்கம் அவசியம் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை நடைபெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒரே தொழிற்சாலையில் ஹலால் சான்றிதழ் உள்ள பொருட்களையும் ஹலால் சான்றிதழ் அற்ற பொருட்களையும் உற்பத்தி செய்வது எவ்வாறு சாத்தியமாகும்.
உலமா சபையும் வர்த்தக சம்மேளனமும் இணைந்து மேற்கொண்டுள்ள ஏற்றுமதிப்பொருட்களுக்கு மட்டும் ஹலால், உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு ஹலால் இல்லை என்ற தீர்மானம் நடைமுறையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இந்நிலையில் ஹலால் சான்றிதழை இனிமேல் வினியோகிப்பதில்லை என உலமா சபை எடுத்த தீர்மானம் தொடர்பில் அவர்கள் விரிவான விளக்கத்தினை வழங்க வேண்டும்.
அத்துடன் இதுவரை ஹலால் சான்றிதழ்களை பெற்றுள்ள வியாபாரிகளும் அது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.VV

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :