காரைதீவில் வாகன விபத்தில் நற்பிட்டிமுனையைச்சேர்ந்த தந்தையும், மகனும் படுகாயம்.



(எஸ்.அஷ்ரப்கான்)

அம்பாரை காரைதீவு பிரதான வீதியில் நேற்று மாலை (15) இடம்பெற்ற வாகன விபத்தில் நற்பிட்டிமுனையைச்சேர்ந்த தந்தையும், மகனும் படுகாயமடைந்த நிலையில்  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவிடயமாக தெரியவருவதாவது,

சம்மாந்துறையிலிருந்து நற்பிட்டிமுனையை நோக்கி மோட்டார் வாகனத்தில் வந்துகொண்டிருந்த தந்தையும், மகனும் மாவடிப்பள்ளி தாம்போதி தாண்டி வந்துகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த பிரிதொரு  நபர் மோதுண்ட வேளை உடனடியாக தப்பிச் சென்றுள்ளார். 
சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் வீதியின் அருகே இருந்த வயல் பகுதியில் விழுந்து கிடந்த நிலையில் விபத்துக்குள்ளானவர்கள் வீதியினால் வந்த பாதசாரிகளால் மீட்கப்பட்டனர்.
இதுவிடயமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :