அல் கைதா இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் ஒசாமா பின் லேடனின் பேச்சாளர் கைது !!



அல் கைதா இயக்கத்தின் ஸ்தாபகத்  தலைவர் ஒசாமா பின் லேடனின் பேச்சாளர் கைது செய்யப்பட்டுள்தாக சரவதேச ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. சுலைமான் அபு காயித் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஜோர்தானில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளதாகவும் இவருக்கு எதிராக நியூயோர்க் இராணுவ நீதிமன்றில் பயங்கரவாத   மற்றும் ஆட்கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ்  வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
கைது செய்யப்பட்டுள்ள அபு காயித்,  பின் லேடனின் மருமகன்களில் ஒருவர் எனவும்  விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
பின் லேடனின் ஊடகப் பேச்சாளராக கருதப்படும் அபு காயித் என்பவரை கைதுசெய்துள்ளமை மற்றும் அவரை அமெரிக்க பாதுகாப்புத்தரப்பினரிடம் கையளித்தமை ஆகியவற்றை ஜோர்தான் பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் காயித் கைது செய்யப்பட்டமையானது அல் கைதாவுக்கெதிரான அமெரிக்க நடவடிக்கையில் மிக முக்கியமான வெற்றி என அமெரிக்க உளவுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
 VV.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :