அட்டாளைச்சேனை கோட்டமட்டத் தமிழ்த்தினப் போட்டிகள்


           (முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

அட்டாளைச்சேனை தமிழ்த் தினப் போட்டிகள் எதிர்வரும் 14.03.2013 அன்று ஆரம்பமாக உள்ளன. எழுத்தாக்கத்திறன் போட்டிகள் எதிர்வரும் வியாழன் 14.03.2013 ல் அட்டாளைச்சேனை அக்-அறபா வித்தியாலயத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.

அரங்க நிகழ்வுகள் எதிர்வரும் புதன் 20.03.2013 ல் ஒலுவில் அல்-ஜயிசா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன. தமிழ் தினத்திற்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மாணவர்களை உரிய வேளைக்கு போட்டிகளில் பங்குபற்ற ஏற்பாடுகளைச் செய்யுமாறு சுற்றுநிருபம் மூலம் பாடசாலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டமட்டத் தமிழ்த்தினம் வழமைபோல இம்முறையும் சிறப்பாக நடைபெற அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் சிறந்த ஒத்துழைப்ப நல்க வேண்டும் என கோட்டமட்டக்கல்விப் பணிப்பாளர் , எம்.ஏ.சி.கஸ்ஸாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :