மகப்பேற்று வைத்தியர்களின் கவனக்குறைவால் மனைவிகள் மரணம்: நடவடிக்கை எடுக்குமாறு கணவன்மார் கோரிக்கை


மகப்பேற்று வைத்தியர்கள் இருவருடைய கவனக்குறைவால் தமது மனைவிகள் மரணமானமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடித் தெரு, ஜேசுதாசன் கோல்டன் பெஞ்சமின் மற்றும் சின்ன ஊறணி, ஆர்.கிங்ஸ்லி பிரசாத் ஆகியோர் தமது மனைவியர் மகப்பேற்று வைத்திய நிபுணர்களின் கவனக்குறைவால் மரணமடைந்ததாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் படியும், சிறுவர் அபிவிருத்தி. மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, குற்றப் புலனாய்வுப்பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண ஆளுனர், கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

இந்தக் கடிதத்துக்கு அமைவாக, குற்றப்புலனாய்வுப்பிரிவு பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி மதுரரா மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விசாரணை நடத்துமாறு பணித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :