மாநகர சபையில் கறுப்பப்பட்டி அணிவதை விட பதவிகளுக்கு வாலாட்டும் தலைவர்களுக்கு பாட்டியணியலாம் -முபாரக் மெளலவி


(மருதூர் அஷ்ரப்கான்)

மாநகர சபையில் கறுப்பப்பட்டி அணிவதை விட பதவிகளுக்கு வாலாட்டும் தமது தலைவர்களுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவிப்பதற்கு இவர்கள் முன் வர வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கூறியிருப்பதாவது,

இந்த நாட்டின் வரலாற்றில் என்றுமே கண்டிராத அளவு இனத்துவேசம் இந்த ஆட்சியில் பகிரங்கமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் போது பூனைக்கு மணி கட்டுவது யார், எப்படி என்று தெரியாமல் முஸ்லிம் கட்சித்தலைமைகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. 

தங்களது சுய நல பதவிகளுக்கு ஆப்பு வந்து விடும் என்ற அச்சத்திலேயே இவர்கள் இவை பற்றி பாராளுமன்றத்தில் பேசாமல் மூடிய அறைக்குள் இருந்து கொண்டு குசு குசுக்கின்றனர்.

முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் ஆபத்து பற்றி இவர்கள் பேசுவார்கள் என நம்பி இவர்களுக்கு வாக்களித்த முஸ்லிம் சமூகம் இன்று நாதியற்று தத்தளித்துக்கொண்டிருக்கும் அதே வேளை சமூகத்தக்காக தமது சுயநலன்களை வீசி விட்டு களத்தில் குதித்திருப்போரைக்கூட இனங்கண்டு அவர்களை ஆதரிக்கத்தெரியாத ஒரு சமூகமாகவும் முஸ்லிம் சமூகம் இருக்கிறது.

இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் கீழ் மட்ட உறுப்பினர்களும் தலைவர்களும், செயலாளர்களும் வெவ்வேறு விதமாக நடப்பதைக்காண்கிறோம். முஸ்லிம்களின் பிரச்சினைக்கு ஒரு மாகாண சபை உறுப்பினர் கண்டன தீர்மானம் கொண்டு வருகிறார்.  இன்னொருவர் கறுப்பப்பட்டி அணிகிறார். கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவரோ தமது தலைவர்களின் மௌனம் பாராட்டுக்குரியது என வெட்கமில்லாமல் வாலாட்டுகிறார். செயலாளர் நாயகம்களோ பூசி மெழுகி கண்டனம் தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் இவர்கள் இந்த அரசாங்கத்தின் வால்களாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அறிக்கை விட்டதற்காக பொலிஸ் மற்றும் இரகசிய பொலிசாரின் கெடுபிடிகளுக்கு நாம் முகம் கொடுக்கும் போது இத்தனை பகிரங்கமாக போஸ்டர்கள் ஒட்டப்படும் போதும் பன்றியின் உருவத்தில் அல்லாஹ் என்ற அழகிய வார்த்தையை எழுதி அமவதித்த போதும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிந்த நிலையிலும் இவற்றை பாராளுமன்றத்தில் கண்டித்துப்பேசாமல் இவர்களின் சுயநல ஏமாற்றுத்தலைமகள் வாலாட்டிக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறு தமது சுயநலனுக்காக சமூகத்தை காட்டிக்கொடுத்து அற்ப எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டிக்கொண்டிருக்கும் தமது தலைமைகளுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவித்து கட்டுப்படுத்த முணையாமல் மாநகர உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிவதில் எந்த அர்த்தமுமில்லை என்பதை கூறி வைக்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :