பங்களாதேஷ் முஹமட் அஷ்ரபுல், அணித்தலைவர் முஸ்பிகுர் ரஹீம் ஆகியோரின் சிறப்பான சதங்கள்.


முஹமட் அஷ்ரபுல், அணித்தலைவர் முஸ்பிகுர் ரஹீம் ஆகியோரின் சிறப்பான சதங்களுடன்  இலங்கை அணிக்கு சிறந்த முறையில்  பதிலளித்து ஆடிவரும்  பங்களாதேஷ் இன்றைய  3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இனிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்து 438  ஓட்டங் களைப்பெற்றுள்ளது.

இந்நிலையில் முதலாவது விக்கெட்டுக்காக களம் புகுந்த அஷ்ரபுல் 189 ஓட்டங்களுடனும் முஸ்பிகுர்  ரஹீம் 152 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி காலியில் நடைபெற்று வருகின்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, குமார் சங்கக்காரவின் சதத்துடனும் உபதலைவர் தினேஷ் சந்திமால் (116), திரிமன்னே (155) ஆகியோரின் கன்னிச்சதங்களுடனும் 4 விக்கெட்டுக்களை இழந்து 570 ஓட்டங்களை குவித்து போட்டியின் 2 ஆவது நாளான நேற்று மதிய போசன இடைவேளையின் பின் தனது முதல் இனிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது.

இதனையடுத்து அன்றைய தினம் பதிலுக்கு தனது முதல் இனிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் போட்டியின் 3 ஆவது நாளான இன்று  மீண்டும் தனது முதல் இனிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் ஆட்டநேர முடிவில் மேலும் 303 ஓட்டங்களைப் பெற்று முதல் இனிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்து 438 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதில் அஷ்ரபுலுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்த மொய்முனுல் ஹக் மேலும் 20 ஓட்டங்களைப்பெற்ற வேளையில் 55 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப அடுத்து வந்த மஹமதுல்லா ஓட்டமெதனையும் பெறாது வந்த வேகத்திலேயே அரங்கு திரும்பினார்.

இதனையடுத்து களம் புகுந்த முஸ்பிகுர்  ரஹீம்- அஷ்ரபுல்லுடன் சிறந்த இணைப்பினை அமைக்க இன்றைய 3 ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இருவரும் 261 ஓட்டங்களைப் பகிர்ந்ததுடன் சதங்களைப்பெற்று ஆட்டமிழப்பின்றி களத்திலிருந்தனர்.

 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :