செய்தியாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி.


AD-யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர் பத்திரிகை ஒன்றின் அலுவலக செய்தியாளர் எஸ்.ஸ்ராலின் என்பவர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதில் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

கொக்குவில் உள்ள தனது வீட்டுக்கு மதிய உணவுக்காக சென்று அலுவலகம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த போது, மோட்டர் சைக்கிளில் வந்த நபர்கள் இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

தாக்குதலில் காயமடைந்த செய்தியாளரை வீதியில் சென்றவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

எனினும் இது குறித்து முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என யாழ். பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று (08) காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தி சேகரிக்கச் சென்ற எஸ்.ஸ்ராலின் பல கேள்விகளை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :