கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சருக்கு ஓர் திறந்தமடல்


(அபூ இல்மா)

தற்போது கிழக்குமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தவணை ஒனறிட்கான பரீட்சைகள் நடாத்தப்படுவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றுவருகின்றன.பாடசாலைமட்டக்கணிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு தவணைப்பரீட்சைகள் நடைபெறாது எனவும், முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.மேல்மாகாணத்தில் தவணைப்பரீட்சை நடாத்திய அதிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட செய்தி ஒன்று பத்திரிகையில் வெளியானதை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.

எது எப்படி இருந்தபோதும் ஒரு தெளிவு இல்லாத நிலையில் மீண்டும் தவணைப்பரீட்சைக்குள் பல பாடசாலைகள் விழுந்துள்ளன.பரீட்சைகளில் காணப்படும் குறைபாடுகளைக்களைவதற்காகவே பாடசாலை மட்டக்கணிப்பீடு அறிமுகம் செய்யப்பட்டது.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக மாகாணக்கல்விப்பணிப்பாளர்,வலயக்கல்விப்பணிப்பாளர் போன்றோர் மதில்மேல் பூனைபோல்  உள்ளனர்.பரீட்சை நெருங்கிவிட்டால் போதும் கல்வி வியாபாரிகளான தனிநபர்களும்,குழுக்களும் பாடசாலைக்குள் படையெடுக்கின்றனர்.   10-15 வீதம் தருகிறோம் எம்மிடம் பரீட்சைத்தாள்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனச்சலுகைகளை அள்ளி வீசுகின்றனர்.இதில் பல பாடசாலைகள் வினாத்தாள்களின் தரத்தையோ மாணவர்களின் எதிர்காலத்தையோ பற்றி எவ்வித சிந்தனையுமின்றி  வீதக்குழியில் விழுந்துள்ளன.

இதில் சில கல்வியதிகாரிகளும் செல்வாக்குச்செலுத்துவதைக் காணமுடிகிறது.இப்படியான பரீட்சைகளை நடாத்துவதன் ;முலம் சில தனி நபர்களும்,குழுக்களும் பல இலட்சம் ருபாய்களை ஒவ்வொரு கல்வித்தவணையிலும் பெற்றுக்கொள்கின்றனர்.இவ்வாறான பரீட்சைத்தாள்களை மாகாணக்கல்விப்பணிமனை அல்லது வலயக்கல்விப்பணிமனைகள் தமது வளவாளர்களைக்கொண்டு தயாரித்து விநியோகிப்பதன்முலம் பெருந்தொகைப்பணத்தை வருமானமாகப்பெற்றுக்கொள்ளலாம்.இப்பணத்தை கிழக்குமாகாண மாணவர்களின் கல்வி மேன்பாட்டிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஓவ்வொரு பாடசாலையும் தாம் தாம் விரும்பியவாறு விரும்பியவர்களிடமிருந்து வினாத்தாள்களைப்பெற்று பரீட்சை நடாத்துவதால் பரீட்சைத்தரத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.சில பரிட்சை வினாத்தாள்கள் கடந்தகாலங்களில் நடாத்தப்பட்ட வினாத்தாள்களில் சிறு திருத்தத்துடன்வெளியாவதையும் நிருபிக்கலாம்.

ஆகவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இவ்வாறு பரீட்சை நடாத்துவோரின் கல்வித்தகைமைகள்,தொழிற்தகைமைகள்,தொழில் அந்தஸ்துகளையும் ,இவர்களின் பரீட்சை வினாத்தாள்களையும் திரட்டி பகுப்பாய்வு செய்வதுடன், இவ்வாறு பரீட்சை நடாத்த சட்டப்படி அங்கீகாரம் உள்ளதா? என்பதையும் பெற்றோர்களுக்கு ஊடகங்கள் வாயிலாகத்தெரியப்படுத்தவும்.

இவ்வாறான பரீட்சைகள் நடாத்தமுடியுமென்றால்  அவற்றை மாகாணக்கல்வியமைச்சால் நடாத்துமாறு வேண்டிக்கொள்வதுடன்.,மாணவர்களிடம் அறவிடப்படும் பரீட்சைக்கட்டணங்களுக்கு பாடசாலையால் கட்டாயம் பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படவேண்டும் என்பதையும் சுற்றுநிருபங்கள் முலம் வலியுறுத்துமாறும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :