நாங்கள் இனக் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை -பொதுபல சேனா


இலங்கையில் மீண்டும் இனக் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று வரகாபொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பொது பல சேனா அமைப்பு நாட்டில் மீண்டும் இனக் குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஞானசார தேரர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வாசுதேவ நாணயகார போன்றோர், சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக செயற்பட்டு சிங்களவர்களை மறந்துவிட்டனர்.

சிங்கள மக்களின் வாக்குகளால் அமைக்கப்பெற்ற அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்துக் கொண்டு, சிங்கள  மக்களுக்கு எதிராக செயற்படுகின்றனர்.

எவ்வாறாயினும் பொது பல சேனா அமைப்புக்கு நாட்டில் இனக்கலவரத்தை தூண்டும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.vv
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :