எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள், ஆனால் சிறையில் மட்டும் அடைக்க வேண்டாம்- குற்றவாளிகள் கோரிக்கை

கொன்றுவிடுங்கள் : டெல்லி மாணவி வழக்கில் கைதானவர்கள் கதறல்!

எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள், ஆனால் திகார் சிறையில் மட்டும் அடைக்க வேண்டாம் என டெல்லி மாணவி வழக்கில் கைதான குற்றவாளிகள் நீதிமன்றத்தில் கதறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியத் தலைநகர் டெல்லியில் ஓட்டும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பேருந்து ஓட்டுனர், திகார் சிறையில் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மற்ற 5 குற்றவாளிகளும் விசாரணைக்காக நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகள் 5 பேரையும் திகாரில் உள்ள வேறு சிறைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தங்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுமாறும், திகார் சிறையில் அடைக்க வேண்டாம் எனவும் குற்றவாளிகள் 5 பேரும் நீதிபதியிடம் கூறியிருப்பதாக தெரிகிறது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :