கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்படக்கூடிய அபாயம் -Dr ஜயலத் ஜயவர்த்தன


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 

மத்தல சர்வதேச விமான நிலையத்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் சிலர் தற்போது மத்தல விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள உபகரணங்கள் சில மத்தல் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதென ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார். AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :