19 வகையான சுவையூட்டிகளை உணவில் சேர்ப்பதற்கு சுகாதார அமைச்சு தடை

19 வகையான சுவையூட்டிகளை உணவில் சேர்ப்பதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.

உணவு ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த வருடம் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தடையை விதித்திருப்பதாக, சுகாதார அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எலொய்ன், பேர்பெரின், பெட்டா எசரோன், கேட் ஒயில், கலமஸ் ஒய்ல் உள்ளிட்ட 19 சுவையூட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, சில சுவையூட்டிகளை பயன்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சிடம் அனுமதி கோர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, டய்எசட்டின், டய்ஈதர், ஈதயில், எசிடெட், ஈதயில் லெ;கொஹோல், க்ளிசரோல், அய்சோப்ரொபயில் எல்கஹொல், ப்ரொபிலின் க்ளயிகோல், ட்ரைஎசட்டின் போன்றவற்றை பயன்படுத்த முன்கூட்டிய அனுமதி கோரப்பட வேண்டும்.

அத்துடன் பால், பாலுற்பத்தி பொருட்கள், ஐஸ்பழம், மாகரின், பழங்கள் மற்றும் மரக்கறிகள் போன்றவற்றுக்கு சுவையூட்டிகளை சேர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :