இலங்கையர்களில் 80 ஆயிரம் பேர் மத்திய கிழக்கில் இஸ்லாத்தை தழுவுகின்றனர் - அத்தே ஞானசார தேரர்

த்திய கிழக்கில் தொழில் புரியும் இலங்கை பிரஜைகளில் 80 ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவிக் கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார் .

தனிப்பட்ட நலன், அச்சுறுத்தல், அழுத்தங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அந்நிய மதங்களுக்கு பாதுகாப்பு இல்லாமை ஆகியன காரணமாக இவர்கள் இஸ்லாம் மதத்தை தழுவிக் கொள்கின்றார்களாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில், இலங்கையின் அரசியல்வாதிகளே இதற்கு முற்றாக பொறுப்புக் கூறவேண்டும். அரசியல்வாதிகள் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றாத காரணத்தினால், இலங்கை பிரஜைகள் அவ்வாறு இஸ்லாத்தை தழுவும் நிலை ஏற்பட்டுள்ளது.

டுபாய் நாட்டில் தொழில் புரிந்து வரும் இலங்கை பிரஜைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவிக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :