அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நிகழ்வு

-எம்.எம்.ஜபீர், ஹாசிப் யாஸீன்-

சுகாதார அமைச்சு முன்னெடுத்துவரும் வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளை பலப்படுத்தும் திட்டத்தின் கீழ் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (27) வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

நெதர்லாந்து அரசாங்கத்தின் 50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த இரத்த வங்கி கட்டிடத்திற்கான அடிக்கல்லினை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் பொதுசுகாதார வைத்தியஅதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக், சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் வை.எல்.எம்.யூசுப், கண் வைத்திய நிபுணர் டாக்டர் எம்.எம்.ஏ.றிசாத் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :