விடுதலைப் புலிகளின் கப்பல்களை ஏன் அரசாங்கம் கைப்பற்றவில்லை - ரணில் கேள்வி

விடுதலைப் புலிகளின் கப்பல்களை ஏன் அரசாங்கம் கைப்பற்றவில்லை என்று, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது இலங்கையில் பாரிய அளவில் போதைப் பொருள் விற்பனை இடம்பெற்று வருகிறது.

கிரிபத்கொடை பகுதியில் பால் மாவை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்தாலும், போதைப் பொருட்களை இலகுவாக பெற்றுக் கொள்ள முடிகிறது.

எங்கிருந்து இந்த போதைப் பொருட்கள் வருகின்றன?

தாய்லாந்து போன்ற நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை கடத்தும் கப்பல்களே போதைப் பொருட்களையும் விநியோகித்தன.

தற்போது விடுதலைப் புலிகளின் இலட்சினை கொண்டு, அதன் கப்பல்களை பயன்படுத்தி போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.

அதனால்தான் அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் குறித்த தகவல்கள் எதனையும் வெளியிடுவதில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :