காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் நூலக மேல்மாடி கட்டட திறப்பு விழா - படங்கள்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியின் பயனாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின்; சுமார் 70 இலட்சம் ரூபாய் செலவில் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட நூலக மேல்மாடி கட்டட திறப்பு விழா 27-01-2014 இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் எம்.சி.எம்.எ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழாவில் பொருளாதார அபிபிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன் போது பிரதம அதிதியினால் குறித்த கட்டிடத்திற்கான நாடா வெட்டி வைக்கப்பட்டதுடன் நினைவுக் கல்லும் தீரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெப்பை, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் ஐ.எம்.இப்றாஹீம் உட்பட உதவி அதிபர்கள்,ஆசிரிய ஆசிரியைகள் ,ஊடகவியலாளர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :