ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை 38 மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவி நீக்கம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது, சாதாரண, சுயாதீன, நடுநிலையான விசாரணை மேற்கொள்ளப்படா விட்டால், அது தொடர்பில் விசாரிக்க முறையான நடைமுறை ஒன்றை செற்படுத்துவது போன்ற விடயங்களை உள்ளடக்கி இன்று (22) பாராளுமன்றத்தில் விஜயதாஸ ராஜபக்ஷவால் தனிநபர் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 34 வாக்குகள் சாதகமாகவும், 72 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி 38 மேலதிக வாக்குகளால் குறித்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment