ந.குகதர்சன்,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மனோடை ஆர்.டி.எஸ். வீதியில் இன்று புதன்கிழமை மாலை கைக் குண்டு ஒன்றினை தாம் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவ்வீதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மதகின் கீழ் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று தென்படுவதைத் கண்டு உறவினர்களிடம் தெரியப்படுத்தியமையால் பொலிஸார் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரும், குண்டு செயல் இழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினரும் இணைந்து கைக் குண்டினை செயல் இழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்திருந்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மனோடை ஆர்.டி.எஸ். வீதியில் இன்று புதன்கிழமை மாலை கைக் குண்டு ஒன்றினை தாம் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவ்வீதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மதகின் கீழ் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று தென்படுவதைத் கண்டு உறவினர்களிடம் தெரியப்படுத்தியமையால் பொலிஸார் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரும், குண்டு செயல் இழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினரும் இணைந்து கைக் குண்டினை செயல் இழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்திருந்தனர்.
0 comments :
Post a Comment