அஸ்வின், ஜடேஜாவுக்கு பாராட்டு - முதலில் பந்து வீசும் முடிவு சரியானதே -டோனி சொல்கிறார்

ந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதிய 3–வது ஒரு நாள் போட்டி ‘டை’யில் முடிந்தது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 314 ரன் குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. கப்தில் 11 ரன்னும், வில்லியம்சன் 65 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன் எடுத்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன் என்ற நிலையில் இருந்தது. அஸ்வின், ஜடேஜா சிறப்பாக ஆடினார்கள். கடைசி வரை ஜடேஜா போராடி அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். கடைசி ஓவரில் அபாரமாக ஆடினார். அவரது அபாரமான ஆட்டத்தால் ‘டை’ ஆனது. அவர் 45 பந்தில் 66 ரன் (5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அஸ்வின் 46 பந்தில் 65 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), டோனி 50 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். கோரி அண்டர்சன் 5 விக்கெட் கைப்பற்றினார்.

இதுவரை நடந்த 3 போட்டியிலும் டோனிதான் ‘டாஸ்’ வென்றார். ஆனால் 3 முறையும் முதலில் பவுலிங்கைதான் தேர்வு செய்தார். இது சரியான முடிவுதான். மோசமானது அல்ல என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து டோனி கூறியதாவது:–

முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்னுக்கு மேல் குவிப்போம் என்று எப்போதும் கருதிவிட முடியாது. 2–வது பந்து வீசும் போது பவுலர்களுக்கு நெருக்கடி ஏற்படும். சில போட்டிகளை வைத்து நாம் எதையும் கருதிவிடக்கூடாது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும்.

மிடில் ஓவரில் நாம் நிலைத்து நின்று ஆட முடியாததால் ரன் இலக்கை எட்ட முடியவில்லை. பேட்ஸ்மேன் என்ற முறையில் நானும் 48–வது 49 ஓவர் வரை களத்தில் இருந்து இருக்க வேண்டும்.

அஸ்வின், ஜடேஜாவின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த ஆட்டம் மூலம் ஜடேஜா தனது ஆட்டத்தில் முதிர்ச்சி பெற்று இருப்பார் என்று நம்புகிறேன்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடியாவிட்டாலும் ‘டை’ ஆனது மகிழ்ச்சிதான். இனிவரும் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி தொடரை சமன் செய்ய போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 0–2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இரு அணிகள் மோதும் 4–வது போட்டி ஹேமில்டனில் வருகிற 28–ந் தேதி நடக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :