விகாராதிபதி தங்குமிடத்துக்கு இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு



பாணந்துறை, , கலிகொட ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி தங்குமிடத்துக்கு இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, கலிகொட ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி தங்குமிடத்துக்கு இன்று அதிகாலை இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு (26) நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விகாராதிபதி தங்கியிருந்த அறையிலுள்ள ஜன்னலினூடாகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூடு சுவரிலேயே பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டை அடுத்து ஜன்னல் பக்கத்திலிருந்து கறுப்பு நிற ஆடையணிந்த ஒருவர் அங்கிருந்து ஓடிச் செல்வதை அவதானித்ததாக விகாராதிபதி ரத்னபுர பொத்துபிடியே ஞானசார தேரர் பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :