முஸ்லிம்கள் அன்று பிரபாகரனின் எல்.ரீ.ரீ.ஈ உடன் ஒன்று சேர்திருந்தால் இந்த இலங்கை பௌத்த நாடு என்று சொல்வதற்கும் எங்களால் முடிந்திருக்காது. அன்று இந்த நாட்டின் பிரிவினைக்கு எதிராக முஸ்லிம்கள் செயல்பட்ட தாலேயே அவர்கள் இரவோடு இரவாக வடக்கில் இருந்து துரத்தப்பட்டா ர்கள். இன்றும் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள் என பௌத்த மதகுரு பேராசிரியர் கம்புருகமுவ வஜிரதேரர் தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹ ம்மத், பௌத்த மதகுரு பேராசிரியர் கம்புருகமுவ வஜிரதேரர் ஆகிய இருவரையும் தலைவர்களாகக் கொண்ட பௌத்த முஸ்லிம் இன ஐக்கிய அமைப்பின் கூட்டம் இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மௌலவி தாசீம், ஹஸ்புல்லாஹ் மௌலவி, முஸ்லீம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன், சட்டத்தரணி அப்பாஸ், மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை யின் மெளலவிகளும் தஹ்லான் ஆகி யோரும் சமுகம் அளித்திருந்தனர்.
ஒரே நாடு அனைவரும் இந்த நாட்ட வர் சகலருக்கு சம உரிமை என்ற கோட் பாட்டில் கையேடு ஒன்று தயாரி க்ககப்பட்டிருந்தது. இதனை சகல மக்களுக்கும் கையளிக்க வேண்டும் என வும் அங்கு தெரிவிக்கப்பட்டது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய கம்புருகமுவ வஜிரதேரர்,
எமது சமுகத்தில் உள்ள ஒருவர் இரு வர் முஸ்லீம்களுக்காக செய்யும் அநீதிகளை வைத்து இந்த நாட்டில் வாழும் 99 வீதமான பௌத்தர்களையும் நாம் கெட்டவர்கள் என்று குறை காண முடியாது.
அதே போன்றுதான் முஸ்லீம்களில் ஒருவர் அல்லது இருவர் செய்யும் செயல்களை வைத்துக்கொண்டு முழு முஸ்லிம் சமுகத்தையும் பௌத்த ர்கள் இழிவுபடுத்த முடியாது. அந்தக் கால த்தில் இந்த நாட்டில் இரண்டு அரசி யல் கட்சிகள்தான் இருந்தன.
ஐ.தே.யும் ஸ்ரீ.ல.சு.கட்சியுமே அவையாகும். இக்கட்சியிலேயே தமிழ், முஸ்லிம்கள் பிரதிநிதிகள் இக்கட்சிகள் மூலம் அரசியலைச் செய்து தமது மக்க ளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட னர். அதில் ஒருவராகவே முன்னாள் அமைச்சர் எம்.எச்.முஹம்மத் திகழ்கிறார். அவர் அரசியல் 60 வருட கால த்தில் சகல சமுகங்களுகக்கும் சேவை செய்தார்.
அரசியல் வாதிகள் தமது சுயலாபத்தி ற்கும் பாராளுமன்றத்திற்கும் செல்வ தற்காக மக்களை இனரீதியாக பிரித்த னர். அதில் காலம்சென்ற அமிர்தலிங் கம் தமிழர் விடுதலைக் கூட்டணி என தமிழ் மக்களைப் பிரித்தார், அதன் பின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டு முஸ்லிம்களும் பிரிந்த அரசி யல் நடத்தி அதனூடாக பாராளுமன் றம் சென்றனர்.
இதனால் இனங்களுக்கிடையே விரிசல்கள் ஏற்பட்டன. அரசியல்வாதிக ளும் தொடர்ந்தும் மக்களை பிரித்து வைத்திருக்கவே விரும்புகின்றனர். இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்கள் ஒருபோதும் இந் நாட்டுக்கு அநீதி இழைக்கவில்லை. அவர்கள் இந்த நாட்டுக்கு நல்லதையே செய்து வந்தனர். அண்மைக் காலமாகவே இந்த ஹலால் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சிறு சிறு விரிசல்கள் ஏற்ப ட்டு வருகின்றன. நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் நாம் செயற்பட வேண்டும் என்றார்.
சட்டத்தரணி அப்பாஸ் -இங்கு உரையாற்றுகையில்
இந்த நாட்டில் மலாயசமுகத்தினர் ஒரு தொகையினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அண்மையில் வெயிடப்பட்ட அரச புள்ளிவிபரத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
அவர்களை முஸ்லிம்கள் என கணக் கிட்டுள்ளனர். இதைப்பற்றி பல கடித ங்கள் ஜனாதிபதிக்கு எழுதியும் எந்த வித மறுமொழியும் வரவில்லை யென அவர் தெரிவித்தார்
0 comments :
Post a Comment