எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை 'எபிக்' கல்வியகத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஓ-எல் தின
நிகழ்வும் (22.01.2014) கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இன்று
(22) புதன்கிழமை இடம்பெற்றது.
'எபிக்' அமைப்பின் உபதலைவர் ஏ.ஜி.எம்.தாசிம் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் வர்த்தக
முகாமைதுவ பீட விரிவுரையாளர் எச்.எம்.நிஜாம் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை அல் - பஹ்ரிய்யா மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ. அப்துர் ரஸ்ஸாக் அவர்களும், விசேட அதிதிகளாக எம்.ஐ.எம். முஸ்தபா, எம்.எஸ்.எம். றிசாட் ஸரிப், எம்.வை. அப்துர் ரஸ்ஸாக், எம்.எச்.ஏ.றஹீம் ஆகியோரும் மற்றும் அமைப்பின் தலைவரும் ஆசிரியருமான எம்.எம். சிறாஜி அவர்களும் அமைப்பின் அங்கத்தவர்களும், ஊர் பிரமுகர்களும், கல்விமான்களும் ஆசிரியைகளும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment