கல்முனைக்கு விஜயம் செய்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் - முதல்வரால் வரவேற்கப்பட்டு கௌரவிப்பு



அஸ்லம் எஸ்.மௌலானா-



ல்முனைக்கு விஜயம் செய்துள்ள பக்தாத் நகர இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அஸ்செய்யித் மன்சூருத்தீன் அல்ஜைலாணி அல்பக்தாதி அவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கு வருகை தந்த இந்த அறிஞர் தலைமையிலான குழுவினர், மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியப்பாரின் அழைப்பையேற்று மாநகர சபைக்கு விஜயம் செய்தனர்.

இதன்போதே அஸ்செய்யித் மன்சூருத்தீன் அல்ஜைலாணி அல்பக்தாதி அவர்கள், முதல்வர் தலைமையில் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.ஆர்.அமீர், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் எம்.ஹக்கீம், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் உட்பட மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :