பல்கலைக்கழக கற்கைநெறியை தொடரும் தனது கனவு நிறைவேறுவதற்காக பாரிசவாத பாதிப்புக்குள்ளாகி உடல் செயலிழந்து தனது முழு நேர கவனிப்பில் இருக்க வேண்டிய நிலையிலிருந்த தந்தையை அலட்சியம் செய்து பிரிந்து செல்ல விரும்பாத மகனொருவர், தனது தந்தையை பல்கலைக்கழகத்தில் தான் தங்கியிருந்த அறைக்கு அழைத்து வந்து பராமரித்துவரும் நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
மத்திய சீனாவில் அன்குயி மாகாணத்திலுள்ள லியுவான் நகரைச் சேர்ந்த குவோ ஷிஜுன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு தனது தந்தையை பராமரித்தவாறு பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து வருகிறார்.
குவோ ஷிஜுனின் தாயாரும் மனநலப் பாதிப்புக்குள்ளாகி பிறரின் முழு நேர கவனிப்பில் இருக்க வேண்டிய நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் காரணமாக சிறு வயதிலேயே தனது தாயாரை பராமரிக்க வேண்டிய நிலைக்கு குவோ ஷிஜுன் உள்ளானார்.
இந்நிலையில் நிர்மாண தொழிலாளியான அவரது தந்தை பாலமொன்றில் பணியாற்றிய வேளை 30 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததால் படுகாயத்துக்குள்ளாகி பாரிச வாத பாதிப்புக்குள்ளானார்
இதனால் ஏற்கனவே தனது தாயாரைக் கவனிக்க வேண்டிய நிலையிலிருந்த குவோ ஷிஜுனின் பொறுப்பு இரு மடங்காக அதிகரித்தது.
அளவுக்கதிகமான குடும்ப பாரத்தை சுமக்க நேரிட்ட போதும், தனது கல்வியை கைவிடாத அவர் சீனாவிலுள்ள முன்னணி பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்.
இதனையடுத்து குடும்ப பொறுப்புக்காக பல்கலைக்கழக கல்வியை தியாகம் செய்வதா அல்லது பல்கலைக்கழக கல்விக்காக குடும்ப பொறுப்பை அலட்சியம் செய்வதா என்ற பெரும் குழப்ப நிலைக்கு குவோ ஷிஜுன் உள்ளானார்.
அவரது மனநலம் பாதிக்கப்பட்ட தாயாரை பராமரிக்கும் பொறுப்பை அவரது பாட்டாவும் பாட்டியும் ஏற்றுக்கொண்ட போதும், பாரிசவாத பாதிப்புக்குள்ளாகிய தந்தையை பராமரிக்க எவரும் முன்வரவில்லை.
இந்நிலையில் தீவிரமாக சிந்தித்த குவோ ஷிஜுன், குறிப்பிட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தை அணுகி தனது நிலையை விபரித்துள்ளார்.
அவரது நிலைமையை அறிந்து அவர் மீது அனுதாபம் கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக வளாகத்தில் குவோ ஷிஜுனுக்கு வழங்கப்பட்டிருந்த அறையில் அவரது தந்தையை வைத்து பராமரிப்பதற்கு அவருக்கு அனுமதியளித்துள்ளது.
தற்போது குவோ ஷிஜுன் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள தனது அறையில் தனது தந்தையை தங்க வைத்து பாடசாலை பாடங்களிடையே அவரை கவனித்து வருகிறார்.
அவர் தனது நண்பர்களிடமும் உறவினர் களிடமும் பணத்தைக் கடனாகப் பெற்றே தனது கல்வியைத் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மத்திய சீனாவில் அன்குயி மாகாணத்திலுள்ள லியுவான் நகரைச் சேர்ந்த குவோ ஷிஜுன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு தனது தந்தையை பராமரித்தவாறு பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து வருகிறார்.
குவோ ஷிஜுனின் தாயாரும் மனநலப் பாதிப்புக்குள்ளாகி பிறரின் முழு நேர கவனிப்பில் இருக்க வேண்டிய நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் காரணமாக சிறு வயதிலேயே தனது தாயாரை பராமரிக்க வேண்டிய நிலைக்கு குவோ ஷிஜுன் உள்ளானார்.
இந்நிலையில் நிர்மாண தொழிலாளியான அவரது தந்தை பாலமொன்றில் பணியாற்றிய வேளை 30 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததால் படுகாயத்துக்குள்ளாகி பாரிச வாத பாதிப்புக்குள்ளானார்
இதனால் ஏற்கனவே தனது தாயாரைக் கவனிக்க வேண்டிய நிலையிலிருந்த குவோ ஷிஜுனின் பொறுப்பு இரு மடங்காக அதிகரித்தது.
அளவுக்கதிகமான குடும்ப பாரத்தை சுமக்க நேரிட்ட போதும், தனது கல்வியை கைவிடாத அவர் சீனாவிலுள்ள முன்னணி பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்.
இதனையடுத்து குடும்ப பொறுப்புக்காக பல்கலைக்கழக கல்வியை தியாகம் செய்வதா அல்லது பல்கலைக்கழக கல்விக்காக குடும்ப பொறுப்பை அலட்சியம் செய்வதா என்ற பெரும் குழப்ப நிலைக்கு குவோ ஷிஜுன் உள்ளானார்.
அவரது மனநலம் பாதிக்கப்பட்ட தாயாரை பராமரிக்கும் பொறுப்பை அவரது பாட்டாவும் பாட்டியும் ஏற்றுக்கொண்ட போதும், பாரிசவாத பாதிப்புக்குள்ளாகிய தந்தையை பராமரிக்க எவரும் முன்வரவில்லை.
இந்நிலையில் தீவிரமாக சிந்தித்த குவோ ஷிஜுன், குறிப்பிட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தை அணுகி தனது நிலையை விபரித்துள்ளார்.
அவரது நிலைமையை அறிந்து அவர் மீது அனுதாபம் கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக வளாகத்தில் குவோ ஷிஜுனுக்கு வழங்கப்பட்டிருந்த அறையில் அவரது தந்தையை வைத்து பராமரிப்பதற்கு அவருக்கு அனுமதியளித்துள்ளது.
தற்போது குவோ ஷிஜுன் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள தனது அறையில் தனது தந்தையை தங்க வைத்து பாடசாலை பாடங்களிடையே அவரை கவனித்து வருகிறார்.
அவர் தனது நண்பர்களிடமும் உறவினர் களிடமும் பணத்தைக் கடனாகப் பெற்றே தனது கல்வியைத் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment