கல்முனை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் மாஹிர் நியமனம்!

 அஸ்லம் எஸ்.மௌலானா,எம்.வை.அமீர்-

ல்முனை மாநகர சபை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சுகாதாரப் பகுதி
அலுவலகத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் முன்னிலையில் இன்று புதன்கிழமை (22) இவர் தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர்,  எம்.எஸ்.உமர் அலி,ஏ.எல்.எம்.முஸ்தபா, மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர சபை உருவாக்கப்பட்டது தொடக்கம் நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்து வந்த இம்மாநகர சபைக்கான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி பதவிக்கு, முதல்வர் நிசாம் காரியப்பர் எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக முதன் முறையாக டாக்டர் ஒருவர் நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், இதற்கு முன்னர் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :