ஓட்டமாவடி பிரதேசத்தில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதானம் - படங்கள்



ந.குஹதர்சன்
ட்டமாவடி கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் வாழைச்சேனை பொலிஸாரும், வாழைச்சேனை அல்-ஹக் விளையாட்டுக் கழகம், அந்நூர் விளையாட்டுக் கழகம் என்பன இணைந்து ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் டெங்கு நுளம்மைப் கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதான அடிப்படையில் பிரதேசங்களைத் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன்போது ஒலி பெருக்கியில் மக்களை அறிவூட்டியதோடு, பொதுச் சுகாதார பரிசோதகர்களும், பொலிஸாரும், விளையாட்டுக் கழக உறுப்பினர்களும், பிரதேச வீடுகளைப் பரிசோதனை செய்து டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது இருப்பிடங்களை வைத்திருந்த சுமார் 14 பேருக்கெதிராக வழங்குத் தாக்கல் செய்யப்பட்டதாக கோறளைப்பற்று மத்தி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :