முந்தைய படங்களை விட பெரிய பட்ஜெட்டுடன் தொடங்கியது நண்பேண்டா படப்பிடிப்பு .

தயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்தின் அத்தனை பணிகளும் முடிந்து விட்டது. பெப்ரவரி 14 ஆம் திகதி வெளியாகும் இப்படத்தை சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார்.

இப்போது இதே கூட்டணி நண்பேன்டா படத்தில் மீண்டும் இணைகிறது. 

படத்தை டைரக்ட் செய்பவர் மட்டுமே மாறுகிறார். எஸ்.எம்.எஸ், ஓகே ஓகே படங்களில் இயக்குநர் ராஜேஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஏ.ஜெகதீஷ் என்பவர் இயக்குகிறார்.

மற்றபடி உதயநிதி, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் கூட்டணி தொடர்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இவர்களும் உதயநிதியின் கூட்டணிதான். ஆர்ட் டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும் கூட மாறவில்லை.

கதையும், காதலையும் நட்பையும் காமெடியாக சொல்லும் அதே கதைதான். திரைக்கதையும், கதையின் களமும், காமெடி ஐடியாவும் புதுசாம். முந்தைய படங்களை விட பட்ஜெட்டும் அதிகமாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :