ந.குகதர்சன்-
வாழைச்சேனை கமநல கேந்திர நிருவாக எல்லைக்குள் இம்முறை செய்கை பண்ணப்பட்ட இருபத்தைந்தாயிரம் ஏக்கர் வயல்களில் மழை நீர் கிடைக்காமையினால் பத்தாயிரம் ஏக்கர் கைவிடப்பட்ட நிலையில், மீதப்பட்ட வயல்களிலும் நோய் பரவி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இம்முறை செய்யப்பட்ட பெரும்போக (மாரிப் போகம்) வயல்களில் வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தில் பதினையாயிரம் ஏக்கர் வயல்களும் மழை நீரை எதிர்பார்த்து பத்தாயிரம் ஏக்கரும் செய்யப்பட்டது.
இதில் மழை நீரை எதிர்பார்த்து செய்யப்பட்ட பத்தாயிரம் ஏக்கர் வயல்களும் உரிய மழை வீழ்ச்சியில்லாததால் முற்றாக கைவிடப்பட்ட நிலையில், மீதப்பட்ட வயல்களிலும் நோய் பரவியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
முள்ளிவட்டுவான், பள்ளிமேடு, பருத்திச்சேனை, ஓட்டுவெளி, அக்குராணை, முரறுத்தானை, வகுளாவெல, மீயான்குளம், சாப்பமடு, கல்வெளி, மதுரங்கேணி போன்ற விவசாயக் கண்டங்களில் செய்யப்பட்ட வயல்கள் நீரின்றி கைவிடப்பட்ட வயல்களைத் தவிர ஏனைய வயல்களில் அரக்கொட்டி, இலைச்சுருட்டி, ஏரி பந்தம் போன்ற நோய்கள் பரவியுள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருவதாகவும், கால நிலைமாற்றத்தினால் போதியளவு அருவடை கிடைக்கப்பெறமாட்டாது என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment