அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் வித்தியாரம்ப விழா பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.அப்துல் சலாம் தலைமையில் நேற்று (22) இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமைலெப்பை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் உள்ளிட்ட பல கல்விமான்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் தரம் 1 மாணவர்களை 2 ஆம் தர மாணவிகள் மலர் தூவி வரவேற்றனர். எல்லாப் பாடசாலைகளையும் விட இந்த வித்தியாரம்ப நிகழ்வு சற்று வித்தியாசமான முறையில் தூஆ பிரார்த்தனையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் அணுசரனையுடன் சிறுவர்களுக்கென ஆரம்பித்து வைத்த வங்கிக் கணக்கின் புத்தகத்தையும் இந்நிகழ்வின்போது கையளித்து வைத்தார்.
0 comments :
Post a Comment