மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை பேண்ட் வாத்தியக் குழுக்களுக்கிடையிலான போட்டி - படங்கள்




ரலாற்றில் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திலுள்ள பாடசாலை பண்ட் வாத்தியக் குழுக்களுக்கிடையில் போட்டியில் பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் கல்வி கோட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

கல்குடா கல்வி வலயத்திலுள்ள பாடசாலை பண்ட் வாத்தியக் குழுக்களுக்கிடையில் போட்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது

கல்குடா கல்வி வலயத்தில் ஏறாவூர்பற்று 2, கோறளைப்பற்று, வாகரை ஆகிய மூன்று கல்வி கோட்டங்களைச் சேர்ந்த ஒன்பது பாடசாலைகள் பங்குபற்றிய இப்போட்டியில் பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயம் முதலாம் இடத்தையும், செங்கலடி மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தையும், வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

கல்குடா வலயயக் கல்விப் பணிப்பாளர் செ.சிறிகிருஸ்ணராஜா தலைமையில் இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம், வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணாகௌரி தினேஷ், வாகரை பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி, வேள்ட் விஷ்ன் கிரான் முகாமையாளர் எஸ்.பி.பிரேமசந்திரன்;, முறக்கொட்டாஞ்சேனை முகாம் இராணுவ பொறுப்பதிகாரி மேஜர் தேவாலஹம, வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்வ அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :