அளுத்கமையில் மூவர் பலி :80 பேர் காயம் -வீடியோ இணைப்பு

பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசத்தில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மையில் காயமடைந்த 80 பேர் களுத்துரை ஆரம்ப வைத்தியசாலை, பேருவளை பிரதேச வைத்தியசாலை தர்க நகர் அரச வைத்தியசாலை மற்றும் அளுத்கம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 7 பேர் உட்பட 36 பேர் களுத்துறை ஆரம்பவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும் இதில் மூவர் உயிரிழந்துள்ளதாக  வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பேருவளை வைத்தியசாலையில் பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தர்கா நகர் வைத்தியசாலையில் இருவர் இதுவரையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேர் அளுத்கம கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 பேர் களுத்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் இருவர் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :