திருத்தங்கள் இன்றேல் இணங்கப்போவதில்லை:அனு­ர­கு­மார திசா­நா­யக்க


ஐ.நா.விசா­ர­ணைக்கு எதி­ராக ஆளும் தரப்­பினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பிரே­ர­ணையில் எம்மால் கொண்டுவரப்­பட்­டுள்ள திருத்­தங்­களை இணைத்துக் கொள்ளவேண்டும். 

இல்­லையேல் பிரே­ர­ணைக்கு இணங்­கப்­போ­வ­தில்லை. அர­சாங்­கத்தின் பதி­லி­லேயே எமது முடிவு தங்­கி­யுள்­ளது என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார்.
 
மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்ட கருத்­தினை முன்­வைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,சர்­வ­தேச விசா­ர­ணைக்கு எதி­ராக ஆளும் தரப்­பி­னரால் பிரே­ர­ணை­யொன்று பாரா­ளு­மன்றில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதனை எதிர்க்­கட்­சி­களும் ஆத­ரிக்க வேண்­டு­மென தற்­போது அர­சாங்கம் வலி­யு­றுத்­து­கின்­றது. இவை எதுவும் ஐ.நா. விசா­ரணைக் குழு­வினை தடுக்­கவோ அல்­லது சர்­வ­தேச அத்து மீறலை கட்­டுப்­ப­டுத்­தவோ மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இது முற்று முழு­தாக அர­சாங்கம் எதிர்­கால தேர்­தலை நோக்கிப் பின்னும் சூழ்ச்சி வலையே.
 
பிரே­ர­ணை­யொன்­றினை சமர்ப்­பித்து அதற்கு ஆத­ர­வாக கைதூக்­கு­வோரை தேசப்­பற்­றுள்­ள­வர்கள் எனவும் எதி­ராக செயற்­ப­டு­வோரை தேசத் துரோ­கிகள் எனவும் முத்­திரை குத்தி மக்கள் மத்­தியில் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள நினைக்கும் அர­சாங்­கத்தின் தந்­தி­ரமே. எனவே அர­சாங்கம் சூழ்ச்­சி­களை செய்து அதன் மூலம் நாட்­டிற்கு நன்மை ஏற்­ப­டு­மெனின் ஜே.வி.பி.யும் அந்த வழியில் செல்லும். எனவே எம்மால் சில திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மான ஆறு யோச­னை­களை நாம் இன்று கட்சி தலை­வர்கள் கூட்டத்தில் தீர்­மா­னித்து பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்­துள்ளோம். அவை­யா­வன,
 
I) ஜன­நா­யக ரீதியில் முன்­னெ­டுக்­கப்­படும் ஆர்ப்­பாட்­டங்­களில் அத்து மீறிய தாக்­கு­தல்கள்  மற்றும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் மக்கள் ஜன­நா­யக ரீதியில் மேற்­கொண்ட ஆர்ப்­பாட்­டங்­களில் இரா­ணுவம் மற்றும் அரச சார் குழுக்கள் அத்து மீறிய தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டது. இது­வ­ரையில் அர­சாங்கம் எவ்­வித தீர்வும் காண­வில்லை.
 
II) ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் ஊட­கங்­களின் தாக்­குதல் 2006ஆம் ஆண்டில் இருந்து இது­வரை 09 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர். 27 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கடத்­தப்­பட்­டுள்­ளனர். எனினும் இது தொடர்பில் அர­சாங்கம் வாய் மூடி­யுள்­ளது. பல ஊட­கங்­களும் தாக்­கப்­பட்­டது. இதை கண்­ட­றி­யப்­பட வேண்டும்.
 
III) அரச காவலில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கைதி­களின் கொலை தொடர்பில் அர­சாங்கம் அமைதி காக்­கின்­றது. கணேசன் நிம­ல­ரூபன் உள்­ளிட்ட பல கைதி­களை சுட்­டுக்­கொன்­றது யார்? அதற்கு தீர்வு என்ன?
 
IV) பொது­மக்கள் மற்றும் சமூ­க­வி­ய­லா­ளர்­களின் மீதான தாக்­குதல் மற்றும் அச்­சு­றுத்தல் வடக்கு மற்றும் ஏனைய மாகா­ணங்­களில் உள்ள பொது மக்கள் மீது தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்டு வந்த அச்­சு­றுத்­தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தீர்வு.
 
V) சட்­டத்தை பாது­காப்­ப­தற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தாக்­கு­தல்கள் குறிப்­பாக சட்­டத்­த­ர­ணிகள் மீதான தாக்­கு­தல்கள்
 
VI) மத மற்றும் தேசிய ஒற்­று­மை­யினை குழப்பும் அமைப்­புக்­க­ளையும் செயற்­பா­டு­க­ளையும் கட்­டுப்­ப­டுத்தல்.
 
இவ் ஆறு கோரிக்­கை­க­ளையும் ஆளும் தரப்பின் பிரே­ர­ணையில் இணைத்­துக்­கொள்ள வேண்டும். அதேபோல் அடுத்த மூன்று மாத காலப்­ப­கு­தியில் இவை அனைத்­திற்­கு­மான தீர்­வினை பெற்­றுத்­தர வேண்டும். அவை ஏனைய கட்­சிகள் விடும் கோரிக்­கைகள் போல் கருத வேண்டாம். ஜே.வி.பி. எப்­போ­துமே உறு­தி­யான நிலைப்­பாட்டில் உள்ள கட்சி. எனவே நாம் முன்­வைத்­துள்ள விட­யங்­களை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்டால் மட்­டுமே எமது முடி­வினை தீர்­மா­னிப்போம். இப்­போது சந்­தர்ப்­பத்­தினை அர­சாங்­கத்­திற்கு கொடுத்­துள்ளோம். எனவே அவர்­களின் பதி­லி­லேயே தீர்வு தங்­கி­யுள்­ளது.
 
மேலும் அர­சாங்கம் பிரச்­சி­னைக்கு தீர்வு காணாது காலத்தை கடத்­து­கின்­றது. எனினும் நாம் இந்­தப்­பி­ரச்­சி­னை­யினை முழு­மை­யாக அழிக்கப் பார்க்­கின்றோம். அதேபோல் பாரா­ளு­மன்றில் பிரே­ர­ணை­களை கொண்டு வரு­வ­தனால் ஐ.நா விசாரணைகளை தடுக்க முடியாது. அவ்வாறு எம்மால் செய்ய முடியும் என்றால் சர்வதேச விசாரணையினை இந்தப்பிரேரணை தடுக்குமெனில் அத்தோடு ஐ.நா.வின் செயற்பாடுகள் தோற்று விடும். அவர்களின் பலம் குறைந்து விடும். அதற்கு சாத்தியமில்லை. எனவே இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி அதனூடான உள்நாட்டு சுயாதீன விசாரணையொன்றினை நடத்துவதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :