நீராடச் சென்றவர்கள் நீரில் மூழ்கினர்; மட்டக்களப்பில் சம்பவம்


ட்டக்களப்பு – வாழைச்சேனை நாசிவன்தீவு முகத்துவாரம் கடலில் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞன் அலையில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனையை சேர்ந்த 17 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குடும்பத்தாருடன் நேற்று மாலை கடலில் குளிக்கச்சென்ற சந்தர்ப்பத்தில் இவர் அலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் மீட்கப்பட்டு, வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :