மஞ்சள் கோட்டு கட­வையில் விபத்து: பெண் பலி


ஞ்சள் கோட்டுக் கட­வையில் இடம்­பெற்ற விபத்­தொன்றில் பெண் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சாலி­ய­வெவ பொலிஸார் தெரி­வித்­தனர். புத்­தளம் – அநு­ரா­த­புரம் வீதியில் 17ஆம் கட்டை அளுத்­கம பிர­தே­சத்தில் இடம்­பெற்­ற இவ்­வி­பத்தில் இஹலபுளி­யங்­குளம் பிர­தே­சத்தைச் சேர்ந்த டி. எம். விம­லா­வதி (வயது 70) என்ற வயோ­திபப் பெண்ணே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

உயி­ரி­ழந்த பெண் அளுத்­கம பிர­தேச மருந்­த­கத்திற்கு வைத்­திய சிகிச்­சைக்காக செல்வதற்கு குறித்த வீதியின் மஞ்சள் கோட்டை கடக்க முற்­பட்­டுள்ளார்.
அவ்­வேளை புத்­தளம் – அநு­ரா­த­புரம் வீதி வழியாக வேக­மாக வந்த கார் இப்பெண் மீது மோதி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
 
இவ்­வி­பத்தில் குறித்த பெண் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­துடன் அப்­பெண்ணின் உடல் பிரேத பரி­சோ­த­னைக்­காக புத்­தளம் வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச்செல்­லப்­பட்­டது.
 
விபத்­துடன் தொடர்­பு­டைய காரின் சாரதி சாலி­ய­வெவ பொலி­ஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :