பெல்கனியில் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் கீழே விழுந்து பலி


ங்கிலாந்து நாட்டின் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள நைட் டவர் என்ற பிரமாண்டமான அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் 19 வயதுடைய அனாஸ்டாசியா என்ற மாணவரும் 18 வயது மிகுவல் ராமோஸ் என்ற மாணவியும் தங்கியிருந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெல்கனியில் நின்று கொண்டே பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெல்கனியின் கண்ணாடி திடீரென உடைந்ததால் இருவரும் நிலைதடுமாறி ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.

இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தபோதிலும், சிறிது நேரத்தில் சிகிச்சைக்கு பலனின்றி இருவரும் பலியாகினர். 

ரஷ்யாவில் உள்ள மாணவியின் பெற்றோர்கள் செய்தி அறிந்து லண்டனுக்கு கிளம்பியுள்ளனர். மாணவரின் தந்தை மெக்சிகோ நாட்டின் எதிர்க்கட்சியில் பணிபுரியும் பிரபல அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை எதிரே உள்ள கட்டிடத்தில் இருந்து பார்த்த ஒருவர், "இருவரும் பெல்கனியில் பாலியல் உறவின் உச்சத்தில் இருந்ததாகவும், கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் மேலிருந்து கீழ் விழுந்ததாகவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :