இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயற்பட்டு வருகிறது-ஏசியன் மிரர்

இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதாக சர்வதேச பொலிஸ் இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளதாம் என ஏசியன் மிரர் என்ற ஆங்கில இணைத்தளம் செய்தி

வெளியிட்டுள்ளது இது தொடர்பில் இன்டர்போல் உள்நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள தீவிரவாதிகள் இலங்கையை ஓர் தளம்மாறும் களமாக பயன்படுத்திக் கொள்வதாகவும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் இலங்கைகுள் பிரவேசிப்பதாகத் நம்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கொழும்பு மற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் ஒத்துழைப்புடன் இவர்கள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

இதேவேளை, கடந்த மாதம் சாகிர் ஹுசைன் என்ற இலங்கையர் இந்தியாவில் கைதானமை தொடர்பில் கருத்துரைத்த பயங்கரவாத தடுப்பு தொடர்பிலான நிபுணத்துவ பேராசிரியர் என்று தெரிவிக்கப் படும் ரொஹாண் குணரட்ன .இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் இலங்கையில் இருப்பதாகவும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என தெரிவித்திருந்தார் அதையும் இந்த ஆங்கில ஊடகம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :