பிறப்புறுப்பு இரு நாட்களாக குழாயில் சிக்கிக் கொண்ட விபரீத சம்பவம்

நிர்வாணக் கோலத்தில் வீட்டிற்கு வர்ணப்பூச்சு பூசுவதில் ஈடுபட்ட 61 வயது நபரொருவரின் பிறப்புறுப்பு இரு நாட்களாக குழாய் ஒன்றில் சிக்கிக் கொண்ட விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. 
 
குவாங்ஸொயு நகரைச் சேர்ந்த லியன் தியன் என்ற மேற்படி நபர் கடும் வெப்பத்தை தாங்கிக் கொள்ள ஆடைகளை களைந்து நிர்வாணக் கோலத்தில் சுவருக்கு வர்ணப்பூச்சு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 
 
இந்நிலையில் கால் வழுக்கி கீழே விழுந்த லியனின் பிறப்புறுப்பு சுவரில் வெளி நீட்டிக்கொண்டிருந்த குழாயில் சிக்கிக் கொண்டது. 
 
இந்நிலையில் பிறப்புறுப்பு சிக்கிய குழாய் பகுதியை சுவரிலிருந்து வெட்டி துண்டித்த லிபன் குழாயில் சிக்கியிருந்த பிறப்புறுப்பை எண்ணைய் சவர்க்காரம் நீர் என்பவற்றை பயன்படுத்தி விடுவிக்க முயற்சித்தார். எனினும் அவரது முயற்சி தோல்வியைத் தழுவியது. இரு நாட்கள் கழித்து பிறப்புறுப்பு வீங்கி வலியெடுக்க ஆரம்பித்ததையடுத்து லியன் மருத்துவ உதவியை நாடினார். 
 
இதனையடுத்து மருத்துவர்களால் அவசர சேவைப் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து 4 மணித்தியாலங்களை செலவிட்டு லியனின் பிறப்புறுப்பு சிக்கியிருந்த குழாய் பகுதியை மின்சார வாளால் வெட்டித் துண்டிக்கப்பட்டு அவரது பிறப்புறுப்பு விடுவிக்கப்பட்டது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :