பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம் தர்கா நகரில் இன்று

ர்கா நகரில் வைத்து பௌத்த தேரரொருவர் தாக்கப்பட்டதாக தெரிவித்து மூன்று முஸ்லிம்கள் கடந்த வியாழக்கிழமை அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் பொதுபலசேனாவின் பேரணியொன்று தர்கா நகரில் இன்று  ஒரு மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிய வருகிறது.

தர்கா நகர், அம்பகஹா சந்தியிலிருந்து ஆரம்பமாகும் இந்த பேரணி அளுத்கம நகர் வரை செல்லவுள்ளது. இதனையடுத்து அளுத்கம நகரில் பொதுக் கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது.

இதன்போது அளுத்கம பௌத்த மகா சம்மேளனமொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த ஆர்பாட்டம் தொடர்பில் சகோதர இணையம் ஒன்றுக்கு  கருத்து தெரிவித்த தர்கா நகர் பிரதேச சகோதரர் ஒருவரின் கூற்று படி ஆர்பாட்டம் செய்பவர்கள்முஸ்லிம்கள் செறிந்துவாழும் தர்காநகர் சந்தி பிரதேசத்திற்கு வருகை தருவதற்கு வாய்ப்புகள் குறைவு என குறிப்பிட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :