தலைவர் ஹக்கீமுக்கு 2 பிரச்சனைகளை நான் ஏற்படுத்தி கொடுத்துள்ளேன் -அமைச்சர் பஷீர்

அஷ்ரப் ஏ சமத்-

 ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தவிசாளரும் அமைச்சருமான பசீர்சேகுதாவுத் அவருடைய பாராளுமன்ற உரைகள் அடங்கிய புத்தக வெளியீட்டின்போது ஏற்புரையில் பேசிய பேச்சிக்களில் இருந்து......
கடந்த 14வருடங்களுக்குப் பிறகு இன்று தான் தலைவர் ஹக்கீம் பேசியதற்குப் பிறகு நான் பேசும் முதல் சர்ந்தப்பமாகும். இதுவரை காலமும் நான் பேசியபிறகு தான் தலைவர் பேசுவார்.

நான் தலைவருக்கு 2 பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கின்றேன். 1 நான் பிரதியமைச்சரை திடிரென ராஜினாமா செய்தது. தலைவர் வெளிநாட்டில் இருந்தபோது கபினட் அமைச்சரை பாரம் எடுத்தது ஆனால் 3வது பிரச்சினை ஒன்றைச் நான் செய்யவிரும்பவில்லை இன்றைக்கென்றாலும் ; இந்த அமைச்சுப் பொருப்பை ராஜினமா செய்வதற்கு தயார். 

ஆனால் தலைவர் ஒருபோதும் நான் பதவி பெற்றதில் முரண்பாடோ அல்ல ஆனால் மற்றவர்கள் தலைவருக்கு கொடுக்கும் தலையிடியில் அவர் முகம்கொடுக்க முடியாமல் உள்ளார். 

எனது அரசியல் ஒரு வித்தியாசமான அரசியல் எனது செயல்பாடுகள் கருத்துக்கள்- உதாரணமாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கு ஆளுணர் மீள நியமிக்க வேண்டாம். என்று சொல்லுவதை விட அவர் இந்த ஆளுணர் நல்லவர். இவர் எங்களோட நிறைய ஒத்துழைக்கின்றார் இவரையே மீள நியமியுங்கள் என்று அரசிடமோ ஜனாதிபதியிடம் சொல்லியிருப்பார் என்றால் அந்த ஆளுணர் மீள நியமிக்கப்பட்டிருக்க மாட்டார்.
-வெகுஜனவிரோதிகள் யாவரும் யதார்த்வாதிகள் அல்ல-
தலைவர் ஹக்கீமின் தலைமைப்பொருப்பில் எனக்கு 3முறை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தந்துள்ளார். நான் அவர் போகும்போது அவருடன் சேர்ந்து வெளியே போகியிருக்கின்றோம். அவர் வரும்போது அவருடன் உள்ளே வந்துள்ளோம். 

எனது கருத்து - முஸ்லீம் காங்கிரஸ் தொடர்ச்சியாக 5 வருடம் மத்திய அரசில் எதிர்கட்சியில் இருந்து அரசியல் செய்து பார்க்கவேண்டும். அதற்காக ஜ.தே.கட்சியிடம் போகிச் சேரமால் ஒரு தனியான இயக்கமாக இருப்பதையும் நாம் பரீட்சித்து பார்க்க வேண்டும். 
 
அரசில் இருந்து விலகுவதென்றால் ஜனாதிபதித் தேர்தல் வரும்போது விலகுவது தருணமல்ல புத்திசாதுரியமல்ல. இப்பவே நாம் அரசிலிருந்து வெளியேற வேண்டும். அதற்கு நான் உடன்பாடு. 

என்னை அரசியலில் கொண்டுவந்தது தமிழ் அரசியல்வாதம் ஈரோஸ் ஊடகவே நான் அரசியலில் வந்தேன். அவர்கள் ஒரு முஸ்லீமை பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள்.

அண்மையில் ஒரு பேராசியர் சொல்லியிருந்தார். அவர் சும்மா பிரதியமைச்சர் பதவி ஒன்றைத்தானே ராஜினமா செய்தார். அந்த பேராசிரியால் ஓ.எல்.பாஸ்பண்னி ஏ.எல். பட்டம், எம்.ஏ பி.எச்.டி செய்து பேராசிரியராக வரமுடியும் என்றால் நான் எம்.பியாகி, பிரதியமைச்சராகி, கெபினட்அற்ற அமைச்சராகி, கெபினட் அமைச்சர் வருவதற்கு ஏன் என்னால் வரமுடியாது ? அவரைப்போன்று படிப்படியாகி முன்னேறி பேராசிரியராக வருவதைப்போன்று எனக்கும் அந்த உரிமைகள் ஆசைகள் உண்டு.
இந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்களுடன் சில கருத்து முரண்பாடுகள் நேற்று ஏற்பட்டது. 

அவர் சொல்லுகின்ற அம்பாறை கரையோர மாவட்டம் முஸ்லீம்களது ஒரு தேசிய பிரச்சிணையல்ல. ஹசன் அலி இந்தக் கட்சியின் ஓர் ஆவணம், ஆணிவேர் அவர் இல்லையென்றால் எங்களிடம் கட்சிபற்றி ஒன்றுமே இல்லை.

அடுத்து கட்சியில் நீண்டகாலமாக இருந்து வருபவர்களுக்கு ஒரு பாரிய அந்தஸ்த்து உருவாக்க வேண்டும். உள்ளே இருந்து வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்தவர்களை விட இந்தக் கட்சிக்குள்ளே தொடர்ந்து இருப்பவர்களது கருத்துக்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து அந்தஸ்த்தும் கொடுக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :