நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வை கொண்டுவராது என தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்றதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
ஊடக ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ள அவர் தற்போதைய ஆளும் கட்சி இந்த நிறைவேற்று அதிகார முறையை கொண்டுவரவில்லை இன்றைய பிரச்சினைகளுக்கெல்லாம் அதனை குறை சொல்லுவது தவறு அதனை கொண்டு வந்தவர்களே அதனை நீக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
எதிர்க்கட்சி தலைவர் எப்போது தேர்தல் நடைபெற வேண்டுமென விரும்புகிறாரோ அப்போது தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அரசியலில் நுழைவது குறித்து கோத்தாபய ராஜபக்ச எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.LM
0 comments :
Post a Comment