நிறைவேற்று அதிகார முறையை கொண்டுவந்தவர்களே மாற்றட்டும்-ஜனாதிபதி


நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வை கொண்டுவராது என தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்றதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

ஊடக ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ள அவர் தற்போதைய ஆளும் கட்சி இந்த நிறைவேற்று அதிகார முறையை கொண்டுவரவில்லை இன்றைய பிரச்சினைகளுக்கெல்லாம் அதனை குறை சொல்லுவது தவறு அதனை கொண்டு வந்தவர்களே அதனை நீக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

எதிர்க்கட்சி தலைவர் எப்போது தேர்தல் நடைபெற வேண்டுமென விரும்புகிறாரோ அப்போது தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அரசியலில் நுழைவது குறித்து கோத்தாபய ராஜபக்ச எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.LM

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :